search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கறிஞர் முறையீடு"

    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench
    மதுரை:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் அழகுமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.



    கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

    அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிப்பதாக தெரிவித்தனர். எனவே, வழக்கறிஞர் அழகுமணி மனு தாக்கல் செய்ய உள்ளார். #GajaCyclone #NationalDisaster #HCMaduraiBench

    ×